இலங்கை

இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் சஜித் எழுப்பிய கேள்வி!

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகரமீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இது பாரதூரமான விடயம். நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு என்ன நடந்துள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ‘ வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர தனது அலுவலகத்தில் பொது மக்கள் தின நடவடிக்கைகளை முன்னெடுக்கையில் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர் பின்னர் உயிரிழந்துள்ளார்.

தவிசாளர் என்பவர் மக்கள் பிரதிநிதியொருவராவார். மக்கள் பிரதிநிதிகளால் கூட பொது மக்கள் தின நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாவிட்டால், இது தேசிய பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையொன்றாக அமைந்து காணப்படுகின்றது.” எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

(Visited 4 times, 4 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்