அரசியல் இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ ஐ.நாவிடம் உதவி கோருகிறார் சஜித்!

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீண்டெழுவதற்காக தம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் ஐ.நா. வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும் (Mark Andre Franche) இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்றது.

இதன்போதே ஐ.நா. பிரதிநிதியிடம், எதிர்க்கட்சி தலைவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

குறித்த சந்திப்பில், இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

பேரிடர் சூழ்நிலையால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பன்முக பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிட பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ்சிடம் எடுத்துரைத்தார்.

அத்துடன், இப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஐ.நாவால் பெற்றுத் தரக் கூடிய ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் பெற்றுத் தருமாறும் சஜித் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல இலங்கை மக்களுக்காக ஐ.நாவால் வழங்கப்பட்டுவரும் ஒத்துழைப்புகளுக்கும் எதிர்க்கட்சி தலைவர் இதன்போது நன்றிகளைத் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!