ஐரோப்பா

செங்கடலில் விபத்துக்குள்ளான பாய்மரப் படகு : மூவரின் உடல்கள் மீட்பு!

செங்கடலில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் காணாமல்போயிருந்த நிலையில்  3 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

44 பேருடன் பயணித்த சீ ஸ்டோரி என்று பெயரிடப்பட்ட அந்த படகு செங்கடல் பகுதியில் விபத்தில் சிக்கியது.  இருபத்தெட்டு பேர் மீட்புப் படையினரால் காப்பாற்றப்பட்ட நிலையில் பலர் மாயமானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பிரித்தானியா, அமெரிக்கா, ஜெர்மனி, போலந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், சீனா, பின்லாந்து, ஸ்லோவாக்கியா, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் படகில் இருந்தனர். தகவல்களின்படி, காணாமல் போனவர்களில் இரண்டு பிரித்தானியர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்தக் கப்பல் மார்சா ஆலமிலிருந்து ஐந்து நாள் பாய்மரப் பயணத்திற்காக புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

(Visited 31 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்