இலங்கை செய்தி

நல்லூர் தேர்திருவிழாவில் கலந்துகொண்ட சாகல ரத்நாயக்க

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, யாழ்ப்பாணம் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற தேர் திருவிழாவில் கலந்துகொண்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா நேற்று விஷேட அர்ச்சனைகளுடன் ஆரம்பமானது.

தேர் திருவிழாவில் கலந்துகொண்ட சாகல ரத்நாயக்க ஆலயத்தில் நடைபெற்ற சமய வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.

பின்னர் சாகல ரத்நாயக்க, வடமாகாண இந்து மத தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் கலந்து கொண்டார்.

(Visited 10 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை