சிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் வான் தாக்குதல்; இரு குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழப்பு

சிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய வான் தாக்குதலில் இரண்டு குழந்தைகள், 9 பொதுமக்கள் உள்பட13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய பகுதியில் ரஷ்ய விமானங்கள் நேற்று குண்டுமழை பொழிந்தன.
இந்த ஆண்டில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் இது என்று போர் மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சந்தையில் குண்டுகள் மழைபோல் பொழிந்ததாகவும் எங்கும் சடலங்களும் ரத்தவாடையும் இருந்ததாகவும் உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 15 times, 1 visits today)