ஐரோப்பா

உக்ரைனுக்காக உளவுபார்த்த ரஷ்ய பாதுகாப்பு குழுவினர் கைது!

உக்ரைனுக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் முன்னாள் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் குழுவை,  ரஷ்யாவின் பாதுகாப்பு சேவையால் கைது செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் விமானப்படைக்கான ஆயுத அமைப்புகள் மற்றும் உபகரணங்களை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப ஆவணங்களை பெயர் தெரியாத நபர்கள் உளவு பார்த்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

இதே குழு ரஷ்யாவின் குர்ஸ்க் மற்றும் பெல்கொரோட் பகுதிகளில் உள்ள ரயில் பாதைகளை தகர்க்கும் திட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

மொத்தம் 4 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் வெடிபொருட்கள், நான்கு டெட்டனேட்டர்கள், ராணுவ வடிவமைப்பு ஆவணங்கள்,  ராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் $150,000 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்