ஐரோப்பா

தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் கீவ் மீது ட்ரோன் தாக்குதலை தொடரும் ரஷ்யா

ரஷ்யா அக்டோபர் 20ஆம் திகதி இரவுநேரத்தில் பல ஆளில்லா வானூர்திகளை ஏவித் தாக்குதலைத் தொடர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.தொடர்ந்து இரண்டாவது நாளாக ரஷ்யா உக்ரேனில் இத்தகைய இரவுநேரத் தாக்குதலை மேற்கொண்டது.

இதில் குடியிருப்புக் கட்டடங்களும் சேதமடைந்தன. பொதுமக்களில் ஒருவர் காயமடைந்ததாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரேன் மீதான தாக்குதலின் தீவிரத்தைப் பகைவர்கள் குறைக்கவில்லை என்று கியவ்வின் ராணுவ நிர்வாகத் தலைவர் செர்ஹி பாப்கோ டெலிகிராம் செயலி மூலம் தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு திசைகளிலிருந்து கியவ் மீது ஏவப்பட்ட ஏறக்குறைய 10 ஆளில்லா வானூர்திகள் அழிக்கப்பட்டதாக அவர் கூறினார். அவை இலக்குகளை எட்டாவிட்டாலும் தகர்க்கப்பட்ட ஆளில்லா வானூர்திகளின் பாகங்கள் விழுந்ததில் ஒருவர் காயமடைந்ததாக அவர் தெரிவித்தார் .

கட்டடக் கூரைகள், குடியிருப்புக் கட்டடங்கள், மின்கம்பிகள் போன்றவற்றில் இத்தகைய ஆளில்லா வானூர்தி பாகங்கள் விழுந்ததில் சேதம் ஏற்பட்டதாக கியவ் நகர மேயர் கூறினார்.

கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்திற்கு கியவ் மீதான ஆகாயத் தாக்குதல் குறித்த எச்சரிக்கை நீடித்தது. முன்னதாக, அக்டோபர் 19ஆம் திகதி இரவு ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் 17 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!