ஐரோப்பா

ருமேனியாவின் எல்லைக்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா!

ருமேனியாவின் எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைனின் துறைமுகங்களான இஸ்மாயில் மற்றும் ரெனி மீது ரஷ்யா ஒரே இரவில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ருமேனியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் இன்று (10.02) தெரிவித்துள்ளது.

நிலைமையை கண்காணிக்க தேசிய வான்வெளியில் “உளவுப் பணிகளை” மேற்கொள்வதற்காக துருக்கிய விமானப்படையின் F-16 ஜெட் விமானம்  ருமேனிய விமான தளத்தில் இருந்து அனுப்பப்பட்டதாக அமைச்சகம் கூறியது.

தாக்குதல்களை ஒட்டிய இரண்டு மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கும் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன.

உலகச் சந்தைகளுக்கு தானியங்கள் மற்றும் பிற பொருட்களை ஏற்றுமதி செய்யும் கெய்வின் திறனை மாஸ்கோ சீர்குலைக்க முயன்று வருவதாக குற்றம் சாட்டப்படுகின்ற நிலையில், இந்த தாக்குதல் குறித்த அறிவிப்பு வந்துள்ளது.

நேட்டோ உறுப்பினர்கள் ருமேனியாவின் பல பகுதிகளில் ட்ரோன் குப்பைகளைக் இனங்கண்டதாக தெரிவித்துள்ளனர்.

(Visited 17 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!