ஐரோப்பா

கடும் புயலால் பாதிக்கப்பட்ட ரஷ்யா : 08 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் கடும் புயல் காரணமாக மரங்கள் முறிந்து முகாம்கள் மீது விழுந்த நிலையில், 08 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய தகவல்படி, மாரி எல்லில்  எட்டுபேர் உயிரிழந்துள்ளதாக நகர மேயர் யெவ்ஜெனி மஸ்லோவ் தெரிவித்தார்.

ஏறக்குறைய 100 மீட்புப் பணியாளர்கள் யால்சிக் ஏரிக்கு அருகிலுள்ள ஒரு முகாமில் குப்பைகளை அகற்றி வருவதாக அவசரகால அமைச்சகம் கூறியுள்ளது. ஒட்டுமொத்தமாக 27 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“விடுமுறைக்கு வருபவர்கள் வானிலை முன்னறிவிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை” என்று செய்தியிடல் செயலியான டெலிகிராமில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புயல் தாக்கியபோது யால்சிக் ஏரியின் கரையில் பல நூறு பேர் முகாமிட்டுள்ளனர் என்று அவசரகால அமைச்சகம் மேலும் கூறியது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!