ரித்திகா சிங்கை ஆச்சர்யப்படுத்திய ரஜினி
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரித்திகா சிங்.முதல் படத்திலேயே பட்டையை கிளப்பிய ரித்திகா, தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
இதன்பின் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து வேட்டையன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து மக்களை கவர்ந்தார்.

இந்த நிலையில், நடிகை ரித்திகா சிங் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எப்படிப்பட்ட ஒரு நபர் என்பது குறித்து வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதில் “திரையுலகில் உள்ள சில நடிகர்களுடன் நடித்த தருணங்கள் எனது மனதில் எப்போதும் இருக்கும். அத்தகைய ஒரு நடிகர்தான் ரஜினிகாந்த். அவர் எவ்வளவு உயரத்தை அடைந்தாலும், மற்றவர்கள் மீது காட்டும் அன்பும் பாசமும் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தும்” என ரித்திகா கூறியுள்ளார்.
(Visited 4 times, 1 visits today)




