இலங்கை

இலங்கையில் மீளவும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அதிகரிக்கும் அபாயம் : மக்களின் நிலை என்ன?

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெற்றோல் மற்றும் டீசல் விலை 420 ரூபாவை தாண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்  சன்ன ஜயசுமண நேற்று (16.11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்கவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த வருட தொடக்கத்தில் இருந்து டீசல் மற்றும் பெற்றோலுக்கு VAT விதிக்கப்படும் என ஷெஹான் சேமசிங்க சபையில் முன்வைத்தார். இதன்போது டீசல் மற்றும் பெற்றோலில் விலை குறித்த கேள்வியை சன்ன ஜயசுமண எழுப்பினார்.

அதற்கு பதிலளிக்காமல் வெறும் சிரிப்பை மட்டுமே அமைச்சர் ஷெகான் சேமசிங்க வழங்கியிருந்தார்.

‘அப்படியானால், ஜனவரி மாதம் முதல் பெற்றோல் மற்றும் டீசல் லிட்டருக்கு 420 ரூபாவாக அதிகரிக்குமென எதிர்பார்க்கலாம்’ என ஜெயசுமண தெரிவித்தார்.

ஒருவேளை அமைச்சரின் கருத்துப்படி பெற்றோல், மற்றும் டீசலின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் அத்தியாவசிய பொருட்கிளின் விலையும் அதிகரிக்க நேரிடும். இது மக்கள் மத்தியில் பாரிய சுமையாக மாறும்.

ஒருபுறம் வரவு செலவு திட்டம் மக்களின் அத்தியாவசிய பிரிச்சினைகளுக்கான அடிப்படையான தீர்வை முன்வைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் அரசாங்கமானது சமீபகாலமாக சில பொருட்களில் விலையை குறைப்பதுபோல் குறைத்து, மீளவும் அதிகரிப்பது அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்