இலங்கை

திருகோணமலையில் டெங்கு நோய் பரவும் அபாயம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

திருகோணமலை மாவட்டத்தில் 17 இடங்களை ஆய்வு செய்த போது டெங்கு குடம்பிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் எஸ்.அருள்குமரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (28) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்

”திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 இடங்களில் டெங்கு தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் 17 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் தவிர்ந்த ஏனைய இடங்களில் ஓரளவு கட்டுப்பாட்டிட்குள் இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தபோதிலும் டெங்கு பரவும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுகின்றது. டெங்கு தொடர்பில் ஆய்வு செய்த போது அதிகளவிலான இடங்களில் குடம்பிகள் காணப்பட்டடதாவும் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் ஆய்வு செய்த 17 இடங்களில் டெங்கு குடம்பிகள்; கண்டு பிடிக்கப்பட்டதாகவும் இதனால் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மிக விரைவில் டெங்கு நோய் பரவக்கூடிய சாத்தியக்கூறு இருக்கின்றது.அதிஷ்டவசமாக கடந்த இரண்டு மூன்று மாதங்களாக டெங்கு நோயின் தாக்கமோ மரணங்களோ கிழக்கு மாகாணத்தில் இடம்பெறவில்லை.

ஆகவே மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் சுற்றுபுறச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் கிழக்கு மாகாண தொற்று நோயியல் வைத்திய நிபுணர் டொக்டர் எஸ்.அருள்குமரன் கோரிக்கை விடுத்துள்ளார்

(Visited 2 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content