அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

வானில் தோன்றும் நெருப்பு வளையம் : லைவ் டெலிகாட்ஸ் செய்ய தயாராகும் நாசா!

அக்டோபர் மாதத்தில் ரிங் ஆஃப் ஃபயர் எனப்படும் சூரிய கிரகணத்தை அமெரிக்கா வாழ் மக்களால் பார்வையிட முடியும் என நாசா அறிவித்துள்ளது.

இது குறித்து ஓ (டுவிட்டர்) இல் பதிவிட்டுள்ள நாசா இந்த சூரிய கிரகணம் அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி தோன்றும் என அறிவித்துள்ளது.

இந்த அற்புதமான இயற்கை நிகழ்விற்கு நாசா ‘நெருப்பு வளையம்’ கிரகணம் எனப் பெயரிட்டுள்ளது.

இந்த கிரகணம் வடக்கே ஓரிகானில் இருந்து தெற்கே டெக்சாஸ் நகருக்கு நகரும் எனவும் மக்கள் வெறும் கண்ணால் இந்த இயற்கை நிகழ்வைக் காண முடியும் என்றும் நாசா கூறுகிறது.

சந்திரன் சூரியனுக்கு முன்னால் கடந்து செல்வதால்  வானத்தில் ஒரு ‘நெருப்பு வளையம் உருவாகும். இந்த வரலாற்று நிகழ்வை அமெரிக்கா வாழ் மக்களால் பார்க்க முடியும் எனவும் இதனை நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் நாசா அறிவித்துள்ளது.

நாசாவின் யூடியூப் சேனலில் இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஒளிபரப்பு செய்யப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்