ஐரோப்பா

பிரித்தானியாவில் நேற்று முதல் அமுலுக்கு வந்த சர்வதேச மாணவர்ளுக்கு எதிரான கட்டுப்பாடுகள்

பிரித்தானியா வரும் சர்வதேச மாணவர்களுக்கு எதிரான புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளன.

உலக நாடுகள் பலவற்றில் வாழும் மக்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கை ஒரு பெரிய கனவு என்றே சொல்லலாம். வெளிநாடுகளில் பணி செய்யவேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் ஒரு பக்கம் என்றால், தங்கள் குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு பணி செய்யவோ அல்லது படிக்கவோ செல்ல, அவர்களை நம்பி நாமும் வெளிநாடு சென்றுவிடவேண்டும் என்ற ஆசையிலிருப்போரும் ஏராளம் இருக்கிறார்கள்.

அப்படி பிரித்தானியாவில் கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்களைப் பின் தொடர்ந்து, அவர்களுடைய குடும்பத்தினரும் பிரித்தானியாவுக்குச் செல்லும் வழக்கம் இருந்துவருகிறது.ஆனால், இனி அது முன்போல் சாத்தியமில்லை, இனி, பிரித்தானியாவுக்குக் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள், முன்போல், தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் பிரித்தானியாவுக்கு அழைத்துவரமுடியாது.

நேற்று, அதாவது, 2024, ஜனவரி 1ஆம் திகதி, அப்படி ஒரு கட்டுப்பாடு பிரித்தானியாவில் அமுலுக்கு வந்துள்ளது. முதுகலை ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவர்கள் அல்லது அரசின் நிதி உதவி மூலம் ஸ்காலர்ஷிப் பெறும் பாடப் பிரிவில் பயிலும் மாணவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!