இலங்கை செய்தி

தெஹிவளை துப்பாக்கிச் சூடு – உரிமையாளர் உயிரிழப்பு

தெஹிவளை, கடற்கரை வீதி (மெரின் டிரைவ்) பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதன் உரிமையாளர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் இன்று  (09) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த ஹோட்டலுக்கு முன்பாக மது அருந்திக்கொண்டிருந்த இருவர், அந்த ஹோட்டலின் உரிமையாளரின் தலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த நபர்  களுபோவில வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!