ஆஸ்திரேலியா

நியூசிலாந்துக் கடற்கரை மணலில் தங்கத் துகள்கள் ; ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

நியூசிலாந்தின் தென் தீவுக் கடற்கரை மணலில் தங்கத் துகள்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒட்டாகோ பல்கலைக்கழகப் புவியியல் துறையின் ஓய்வுபெற்ற கௌவரப் பேராசிரியர் டேவ் குரோ கடற்கரை மணலில் தங்கத் துகள்கள் இருப்பதைக் காட்டும் படத்தை வெளியிட்டார்.

உலகில் கடற்கரை மணலில் தங்கத் துகள்கள் இருப்பதைக் காட்டும் அத்தகைய புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட பெருமை பேராசிரியர் குரோவைச் சேரும்.

நியூசிலாந்தில் 1800களில் தங்கத்துக்கான வேட்டை இடம்பெற்றபோது கடற்கரை மணல் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கலாம் என்று பேராசிரியர் டேவ் குரோ சொன்னார்.

தென் தீவின் கடற்கரையில் பெரும்பாலோர் கவனிக்காத தங்கத் துகள்களை ஆராயும் நோக்கத்தில் ஆய்வுகளை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

மின்நுண்ணோக்கி மூலம் எடுக்கப்பட்ட படங்கள் ஆராயப்பட்டன. சௌத்லேண்ட் பகுதியில் 10 மைக்ரோமீட்டர் அளவிலான சிறிய துகள்கள் காணப்பட்டதாக ஆதாரங்கள் காட்டுகின்றன. அது மனித முடியின் அகலத்தில் ஐந்தில் ஒரு பகுதி என்றார் பேராரிசியர் குரோ.

(Visited 17 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
Skip to content