இலங்கை செய்தி

ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை தொடர்பில் அறிக்கை

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, மலாவி, மொன்டனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளின் குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்து நேற்று (19) இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பொறுப்புக்கூறல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணையர் முன்வைத்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக சம்பந்தப்பட்ட நாடுகளின் குழு தமது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அந்த அறிக்கையில், பயங்கரவாத ஒடுக்குமுறை மற்றும் இணையதள பாதுகாப்பு தொடர்பாக கொண்டு வரப்படும் புதிய சட்டங்கள், மனித உரிமைகள் மட்டுமின்றி அனைவரின் கருத்து சுதந்திரத்தையும் பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அதியுயர் பாதுகாப்புப் பகுதியில் காணி விடுவிப்புக்கு பாராட்டு தெரிவித்த அந்த நாடுகள், வடக்கு, கிழக்கில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறும் தெரிவித்துள்ளன.

மேலும், தன்னிச்சையான கைதுகள், முறையற்ற தேடுதல்கள் மற்றும் பொலிஸ் நடவடிக்கைகளின் போது தடுத்து வைப்பது குறித்து கவலை கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடர் நேற்று (18) ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை