ஆசியா

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பு; பாகிஸ்தான் எல்லையில் 2.26 பில்லியன் டொலரில் இந்தியா பிரம்மாண்ட திட்டம்!

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உலகிலேயே மிகப் பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது.

காலநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் இறங்கியுள்ளன. இந்தச் சூழ்நிலையில் சோலார், காற்றாலை என புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பை உருவாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கும் உப்புப் பாலைவனத்தில் மிகப் பெரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பை உருவாக்கும் பணியில் இந்தியா இறங்கியுள்ளது. இந்தத் திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என்றும் உலகிலேயே மிகப் பெரிய புதுப்பிக்கத்தக்க எரி ஆற்றல் திட்டமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

In the salt deserts bordering Pakistan, India builds its largest renewable  energy project - World - Dunya News

விண்வெளியில் இருந்து பார்த்தாலும், இக்கட்டமைப்பு தெரியும் அளவுக்கு மிகப் பெரியதாக கட்டமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச் பகுதியில் உள்ள காவாடா என்ற கிராமத்துக்கு அருகில் இக்கட்டமைப்பு உருவாக்கப்படுகிற நிலையில், இதற்கு காவாடா புதுப்பிக்கத்தக்க எரி ஆற்றல் பூங்கா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்ட உருவாக்கத்தில் அதானி குழுமம் முக்கிய பங்கு வகிக்கிறது.

726 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இக்கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இது சிங்கப்பூர் அளவுக்கு பெரியதாக இருக்கும். இந்த திட்டத்தின் மொத்த செலவு 2.26 பில்லியன் டொலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பு பணியில் 4,000 தொழிலாளர்களும், 500 பொறியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கட்டமைப்பு மூலம் ஆண்டுக்கு 30 ஜிகாவாட்ஸ் புதுப்பிக்கத்தக்க எரி ஆற்றல் விநியோகம் செய்ய முடியும். இது 1.8 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்க போதுமானதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content