இலங்கை

திலீபனின் தியாகம் கொச்சைப்படுத்தப்படாமல் எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும்: தி.சரவணபவன்

தியாக தீபம் திலீபனின் தியாகம் கொச்சைப்படுத்தப்படாமல் அவரின் தியாகங்கள் எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

தியாக தீபம் திலீபன் அவர்களின் 36வது நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பொது அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வில் காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் நடாத்தினார்கள்.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜோசப்மேரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ்,வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி,சிவில் சமூக செயற்பாட்டாளர் லவன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தியாகதீபன் திலீபனின் திருவுருவப்படத்திற்கு அருட்தந்தை ஜோசப்மேரி அவர்களினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பிரதான ஈகச்சுடர் ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தியாகதீபன் திலீபனின் தியாகம் குறித்த சிறப்புகள் குறித்தான உரிமைகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content