2,000 ஆண்டுகளுக்கு பல சடங்குகள் செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண்ணின் எச்சங்கள் கண்டுப்பிடிப்பு!
2,000 ஆண்டுகளுக்கு முன்பு பல சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்ட மனிதரின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு அயர்லாந்தின் ஒரு சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த எச்சங்கள் பெண்ணின் எச்சங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
குறித்த எச்சங்களை ஆய்வுக்கு உட்படுத்திய விஞ்ஞானிகள் பெரும்பாலும் கிமு 343 முதல் கிமு 1 வரை வாழ்ந்த 17 முதல் 22 வயதுக்குட்பட்ட பெண்களுடையது என்பதைக் கண்டறிந்தனர்.
பெண்ணின் கழுத்து முதுகெலும்புகளில் வெட்டு அடையாளங்கள் காணப்பட்டன, அவை மரணத்திற்கான சாத்தியமான காரணமாக வேண்டுமென்றே தலை துண்டிக்கப்பட்டதை சுட்டிக்காட்டுகின்றன.
இது இரும்பு யுக காலத்தில் சடங்கு மற்றும் தியாகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
(Visited 30 times, 1 visits today)





