ஆசியா செய்தி

காசு இல்லாமல் தவிக்கும் பாகிஸ்தானின் கராச்சி நகர மக்கள்

பாகிஸ்தானின் கராச்சி நகர மக்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கராச்சியில் நிறுவப்பட்டுள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லாமையே இந்த நிலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கராச்சி மக்கள் நாள் முழுவதும் பல சந்தர்ப்பங்களில் தமக்குத் தேவையான பணத்தைப் பெறுவதற்காக ஏடிஎம் மையங்களுக்குச் சென்றபோதும் அவற்றில் பணம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் வாடிக்கையாளர்கள் முறைப்பாடு செய்த போதிலும், பணம் தீர்ந்து போன ஏடிஎம் இயந்திரங்களில் மீண்டும் பணத்தை செலுத்த சம்பந்தப்பட்ட வங்கிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹஜ்ஜி பண்டிகை நாளை நடைபெறவுள்ள பின்னணியில் கராச்சி மக்கள் பணத்தை பெற முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி