உயர் தரப்பரீட்சை நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டது
சீரற்ற காலநிலையால் இடைநிறுத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குறிப்பிட்டார்.
அதேநேரம் ஏனைய வகுப்புகளுக்கான மூன்றாம் தவணை பரீட்சை நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்களுக்காக மாத்திரம் மூன்றாம் தவணை பரீட்சை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





