ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பிரதான நகரங்களில் பாரிய அச்சுறுத்தலாக மாறிய எலிகள்

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள சில கடலோர நகரங்களில் எலிகள் படையெடுத்து பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

கரும்பா, நார்மன்ட்டன் நகரங்களில் எலிகள் எங்கும் காணப்படுவதாகக் குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.

எலிகள் கார்களில் உள்ள கம்பிவடங்களைக் கடித்துவிடுவதாகவும் செல்லப்பிராணிகளை அச்சுறுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடற்கரைகளில் அன்றாடம் பல எலிகள் மாண்டுகிடக்கக் காணப்படுவதாக மீனவர்கள் கூறினர். அவை கடலில் கலந்துவிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இறந்துகிடக்கும் எலிகளால் கடற்கரையில் துர்நாற்றம் வீசுகிறது. கடற்கரைகளைச் சுத்தம்செய்ய அதிகாரிகள் முயல்கின்றனர்.

ஆஸ்திரேலியாவில் பெரு மழை பெய்துள்ளதால் அதிகப் பயிர்கள் விளைந்துள்ளன. எலிகள் அவற்றைச் சாப்பிட வெவ்வேறு பகுதிகளுக்குப் படையெடுத்துச் செல்கின்றன.

வரும் வாரங்களில் குவீன்ஸ்லந்து மாநிலத்தில் எலிகளின் பிரச்சினை மோசமாகக்கூடும் என்று கருதப்படுகிறது.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!