ராஜீவ் காந்தி கொலை வழக்கு : நளினி உள்ளிட்ட நால்வரை இலங்கை அனுப்ப நடவடிக்கை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்த முருகன், நளினி உள்ளிட்ட நான்கு பேரை விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் திருச்சி அகதிகள் முகாமில் உள்ள முருகனை விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என நளினி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதற்கமைய முருகன் உள்ளிட்ட நான்கு பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
நான்கு பேரின் கடவுச்சீட்டு ஆவணங்கள் கேட்டு கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
(Visited 10 times, 1 visits today)