அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கும் ராஜபக்ஷ குடும்பத்தினர் – பின்னனியில் ரணில்!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/07/ajith-p-jpg.webp)
ஜனாதிபதியின் அனுசரனையுடன் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் தமது அதிகாரத்தை கையகப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.
பண்டாரகம பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “ தேர்தல் அதிகாரத்தில் தாக்கம் செலுத்தும் எந்த சட்டத்திற்கும் 2/3 பெரும்பான்மை தேவையாகும் எனவும் இந்த அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை எனவும் கூறினார்.
நிதி இல்லை என தேர்தலை நடத்தாமல் பிற்போட்டு திருட்டு தனமாக வந்த மேயர்களை மீண்டும் சேர்த்துக் கொள்வதை ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டிக்கிறது எனவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
அத்துடன் தேர்தல் அதிகாரங்களில் 2/3 பெரும்பான்மை இல்லாமல், தாக்கம் செலுத்த முடியாது எனக் கூறிய அவர், கெட்டகொடவுக்குா அல்லது பாராளுமன்றத்திலோ நிறைவேற்ற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.