செய்தி

டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்ற ரஃபேல் நடால்

டென்னிஸ் போட்டியில் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால்.

பிரெஞ்ச் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை 14 முறை வென்றுள்ளார். மொத்தம் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.

38 வயதாகும் ரபேல் நடால் தற்போது நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பையுடன் விடைபெறுவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் டேவிஸ் கோப்பை காலிறுதியில் ஸ்பெயின்- நெதர்லாந்து அணிகள் மோதின. நடல் நெதர்லாந்தை சேர்ந்த போட்டிக் வான் டி சாண்ட்ஸ்கல்ப்பை எதிர்கொண்டார்.

இதில் 4-6, 4-6 என நடால் தோல்வியடைந்தார். இதனால் தோல்வியுடன் அவருடைய 23 வருட டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

சொந்த மண்ணில் (மலாகா) கூடியிருந்த ரசிகர்களின் மத்தியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத் முயற்சி செய்த நடாலுக்கு தோல்வி ஏற்பட்டது.

கடந்த 2004ம் ஆண்டு ஒரு போட்டியில் தோல்வியடைந்த பிறகு 29 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வெற்றி சராசரியில் சாதனைப்படைத்துள்ளார்.

தொழில்முறை டென்னிஸ் இருந்து ஓய்வு பெற இருப்பதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். காயம் அவரை இந்த முடிவை எடுக்க வழிவகுத்தது.

டேவிஸ் கோப்பையின் முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்தேன். தற்போது கடைசி போட்டியில் தோல்வியடைந்துள்ளேன். ஆகவே, நாங்கள் வட்டத்தை முடித்துள்ளோம். என நடால் நகைச்சுவையாக தெரிவித்தார்.

ஜோகோவிச் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று முதல் இடத்தை பிடித்துள்ளார். நடால் 22 பட்டங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

(Visited 33 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி