ஐரோப்பா

உலகில் எந்த பயங்கரவாதியும் துணிந்து செய்யாததை புட்டின் செய்துள்ளார்!

உக்ரைனின் அணுசக்தி அமைப்பின் மீதான விளாடிமிர் புதினின் தாக்குதல்கள் “உலகில் எந்த பயங்கரவாதியும் இதுவரை துணிந்து செய்யாத தாக்குதல் நிலை என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

ஆழ்ந்த குளிர் காலத்தில்  வெப்பமூட்டும் மற்றும் மின்சார வசதிகள் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் குறித்து உலகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புடின் வேண்டுமென்றே இவ்வாறான தாக்குதல்களை முன்னெடுத்தமையால் நாட்டில்  அவசரகால மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வரும் நாட்களில் வெப்பநிலையானது -25 பாகை செல்சியஸாக குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் மிகப் பெரிய குளிர்காலத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும்  ஜெலென்ஸ்கி  குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே “உயர் மின்னழுத்த துணை மின்நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக, அணு மின் நிலையங்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” என்று உக்ரைனின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான DTEK தெரிவித்துள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!