புல்மோட்டை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி: 11 பேர் கைது!
திருகோணமலை புல்மோட்டை கடற் பரப்பில் சட்டவிரோத இயந்திரங்களை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 மீனவர்களை கைது செய்துள்ளதாக மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடற் படையினர் நடாத்திய சோதனை நடவடிக்கையின் போது வின்ச் பொருத்தப்பட்ட இழுவை இயந்திரங்களைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு வின்ச் பொருத்தப்பட்ட இழுவை இயந்திரங்களுடன் 11 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையின் ரன் வெளி பிரிவிற்கு கிடைக்கப்பெற்று தகவலுக்கு அமைவாக மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட பதில் உதவிப் பணிப்பாளர் ஜெ.ஏ.ஜே.என். ஜெயசூரிய, மீன்வள அதிகாரிகள் ஏ. சஜீவன் மற்றும் பி.எம்.ஏ. டியூக் பீரிஸ், மற்றும் கடற்படையினர் இணைந்து இந்தச் சோதனையை நடாத்தினர்.
இதன் போது இரண்டு வின்ச் பொருத்தப்பட்ட இழுவை இயந்திரங்களுடன், ஒரு மீன்பிடி வலையும் கைப்பற்றப்பட்டதாகவும் மீன்பிடி திணைகள் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள், 1996-ஆம் ஆண்டின் மீன்வளம் மற்றும் நீர்வளச் சட்டம் எண் 2-இன் கீழ் குச்சவெளி சுற்றுலா நீதித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.






