அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் குறிவைப்பு: பேரிடர் நிவாரணம் குறித்து ஐதேக சந்தேகம்!

” நிவாரணத்தைக் காண்பித்து மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முற்படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவே தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நிதியை பகிர்ந்தளித்து மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ள ஜோக்கர்கள் நினைக்கின்றனர்.

பேரிடர் நிலையை பயன்படுத்தி மாகாணசபைத் தேர்தலை நடத்த பார்க்கின்றனரா என்ற சந்தேகமும் எழுகின்றது.

எனவே, இதனை செய்வதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கூட்டி உண்மை தன்மையை தெளிவுபடுத்த வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேன்.

பேரிடரால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? எமக்கு இது பற்றிய தகவல்கள் அவசியம். நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடும்போது இது பற்றி தெளிவுபடுத்த வேண்டும்.
என்றார் ஹரின் பெர்ணான்டோ.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!