ஐரோப்பா

பிரான்ஸில் ஈபிஃள் கோபுரத்தை மூடி போராட்டம்!

பாரிஸில் ஈபிஃள் கோபுரத்தை மூடி தொழிலாளர்கள் இன்று (21.02) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலைநிறுத்தம் செய்பவர்களின் பிரதிநிதிகளில் ஒருவரான CGT தொழிற்சங்கத்தைச் சேர்ந்த டெனிஸ் வவசோரி தொழிலாளர்களின் போராட்டம் பல நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு ஏற்றவாறு சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல் 135 ஆண்டுகள் பழமையான கோபுரத்தின் பராமரிப்பை மேம்படுத்தவும் அவர்கள் விரும்புகிறார்கள், அதன் சில இரும்பு வேலைகளில் துருப்பிடித்த தடயங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(Visited 17 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!