ஆஸ்திரேலியா

நியூசிலாந்து முழுவதும் அமலுக்கு வரும் தடை!

நியூசிலாந்து முழுவதும் பாடசாலைகளில் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்த தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டுப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் (Christopher Luxon) இதனை தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்க அது உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியூஸிலந்தில் சரிந்து வரும் கல்வியறிவு விகிதத்தைக் கையாள லக்சனின் அரசாங்கம் முயற்சி செய்கிறது.

ஒரு காலத்தில் உலகின் சிறந்த கல்வியறிவு கொண்ட நாடுகளில் ஒன்றாக நியூஸிலந்து திகழ்ந்தது. ஆனால் அங்கு தற்போது படிப்புத் திறனும் எழுத்துத் திறனும் பெரியளவு சரிந்துள்ளன.

அங்கு கல்வியறிவு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகச் சென்ற ஆண்டு ஆய்வாளர்கள் சிலர் எச்சரித்தனர்.

15 வயதுப் பிள்ளைகளில் சுமார் மூன்றில் ஒருவரால் கிட்டத்தட்ட அறவே படிக்கவோ எழுதவோ முடியவில்லை என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித