பொழுதுபோக்கு

ராஜமவுலி படத்தில் பிரியங்கா சோப்ராவின் புதிய போஸ்டர் வெளியானது

‘ஆர்ஆர்ஆர்’ என்ற பிரம்மாண்டமான படத்துக்குப் பிறகு இயக்குநர் ராஜமவுலி இயக்கும் படத்தில் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.

இந்த நிலையில், பெயரிடப்படாத இந்த புதிய படத்தில் பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் 15-ம் திகதி பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அண்மையில் இந்தப் படத்தின் வில்லன் பிருத்விராஜின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டது. மேலும், ஸ்ருதிஹாசன் பாடியுள்ள ‘சம்ஹாரி’ பாடல் வீடியோவும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்கும் பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மஞ்சள் நிற புடவையில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குநர் ராஜமவுலி, “இந்திய சினிமாவை உலக அரங்கில் மறு வரையறை செய்த பெண். மீண்டும் இந்திய சினிமாவுக்கு வரவேற்கிறேன். மந்தாகினியின் பல சாயல்களை உலகம் காண ஆவலுடன் காத்திருக்கின்றது” என தெரிவித்துள்ளார்.

(Visited 3 times, 3 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!