இந்தியா செய்தி

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்ட பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். 3வது முறை பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா சென்றார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிலடெல்பியாவுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார்.

அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்து பேசிய பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சிமாநாட்டில் உரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து, நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும், தனது பயணத்தின் போது பிரதமர் மோடி சில முக்கிய இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தினார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது 3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார்.

இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் வலைதளத்தில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் வெற்றிகரமாக அமைந்தது என பதிவிட்டுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!