இலங்கை செய்தி

இந்த வருடத்திலிருந்து மருத்துவ கொடுப்பனவுகளை அதிகரிக்க ஜனாதிபதி நிதியம் தீர்மானம்

இந்த வருடத்தில் இருந்து மருத்துவ உதவி கொடுப்பனவுகளை 100% ஆக அதிகரிக்க ஜனாதிபதி நிதியம் செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மருத்துவ உதவி செலுத்தப்படாத நோய்களுக்கான மருத்துவ உதவித் தொகையும் சேர்க்கப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, மருத்துவ உதவி வழங்கும் போது கருத்தில் கொள்ளப்படும் மாத வருமான வரம்பு ரூ. 200,000.00 உயர்த்தப்பட்டுள்ளது.

நிதி பங்களிப்பு மற்றும் சுகாதார சேவைகளுக்கான பரந்த அணுகலை உறுதி செய்வதன் மூலம் மக்களுக்கு ஆதரவை வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!