ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்படும் – அமைச்சரவைக்கு ரணில் அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்படும் என ஊகங்கள் நிலவி வருகின்ற போதிலும், ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை இவ்வருடம் குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்த வேண்டும் என இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரையான காலப்பகுதிக்குள் நடைபெறும் என தேர்தல் ஆணையம் மே 09ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதன்படி, ஜூலை இறுதி மற்றும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும்.
(Visited 5 times, 1 visits today)