இலங்கை

ஜனாதிபதி ரணில் இந்தியா விஜயம்; 5 பதில் அமைச்சர்கள் நியமனம்

இரண்டு நாட்களுக்கு மட்மே, ஐந்து பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு வியாழக்கிழமை (20) மாலை செல்லவுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, அவர் நாட்டுக்கு திரும்பும் வரையிலும் ஜனாதிபதியிடம் இருக்கும் அமைச்சுகளின் பொறுப்புகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித் பண்டார தென்னகோன், பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கையின் பதில் அமைச்சராகவும், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திரு.திலும் அமுனுகம முதலீடுகள் ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் பதில் தொழில்நுட்ப அமைச்சராகவும் சமூக வலுவூட்டலுக்கான இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல், பெண்கள், சிறுவர்கள் விவகாரம் மற்றும் சமூக அதிகார பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!