இலங்கை செய்தி

மோடியின் பதவிப் பிரமாணத்திற்காக ஜனாதிபதி ரணில் இந்தியா பயணம்

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (09) இந்தியா செல்லவுள்ளார்.

நரேந்திர மோடியின் அழைப்பின்படி,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவில் சமீபத்தில் நடந்த தேர்தல்களில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. பாரிய வெற்றியை பதிவு செய்திருந்தது.

அந்த வெற்றிக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொலைபேசியில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதக்போது, தனது பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாகவும், அந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நாளை (09) ராஷ்டிரபதி பவனில் நடைபெற உள்ளது.

இந்தியாவின் பிரதமராக 73 வயதான நரேந்திர மோடி நாளை மூன்றாவது முறையாக பதவியேற்கிறார்.

இந்த நிகழ்வை முன்னிட்டு தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

(Visited 19 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!