இலங்கை

இலங்கை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை

எதிர்வரும் ஏப்ரல் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொது சேவைகளை தடையின்றி பேணுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) படி, இந்த முயற்சியானது பண்டிகைக் காலத்தில் எந்தவித இடையூறுகளும் இன்றி அத்தியாவசிய சேவைகளை சுமூகமாக நடத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கும் நோக்கம் கொண்டது.

மேலும், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுகள் போன்ற அத்தியாவசிய வகைகளின் கீழ் வரும் நிறுவனங்கள் கூட்டாக இந்த வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில், நாடு முழுவதும் பொது பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கையும் பேணுவதையும் உறுதிப்படுத்தும் வகையில் விரிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பாதுகாப்புப் படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!