இலங்கை

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து கடற்படையினருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி!

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடல் இன்று (26) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

கடற்படையின் மூத்த அதிகாரிகளுடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, ​​இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், கடல் வழியாக ஆயுதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மீதான சோதனைகள் உட்பட ஆழ்கடலில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவான விவாதங்கள் நடைபெற்றன.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட மற்றும் கடற்படையின் மூத்த அதிகாரிகள் குழு ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்