திருகோணமலையில் பாம்புக்கடிக்கு இலக்காகி கர்ப்பிணி பெண் மரணம்
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்காகி மூன்று மாத கற்பிணித்தாயொருவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை மொரவெவ ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இமேஷா குமாரி என்ற மூன்று மாத கற்பிணித் தாயொருவர் மாடு கட்டுவதற்காக சென்றபோது பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளதாக தெரிய வருகின்றது.
மூன்று வயது குழந்தையின் தாயான குறித்த கற்பிணிப் பெண் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்திருந்ததாகவும் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 31 times, 1 visits today)





