உலகம்

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 33 பேர் படுகாயம்!

வடக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 33 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில், 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்று பதிவாகியது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தினால் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அமோரிக்கு தெற்கே, இவாட் (Iwate) மாகாணத்தின் குஜி (Kuji) துறைமுகத்தில் 70 செ.மீ சுனாமி அலைகள் பதிவாகியுள்ளன.

அதே நேரத்தில் பிராந்தியத்தின் பிற இடங்களில் 50 செ.மீ வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, வானிலை ஆய்வு நிறுவனம் 3 மீ/10 அடி உயரம் வரை சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்தது, 90,000 குடியிருப்பாளர்களை வெளியேற்ற உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!