அரசியல் இலங்கை செய்தி

டித்வா புயலிலும் “அரசியல்”?

அனர்த்தத்தை பயன்படுத்தி அரசியல் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படவில்லை என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பேரிடரில் இருந்து மீள்வதும், நாட்டை கட்டியெழுப்புவதுமே தற்போது முதன்மை நோக்கமாக உள்ளது எனவும் அவர் கூறினார்.

அனர்த்தத்தை பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் நடத்துவதாகவும், நிவாரண பொறிமுறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன.

இந்நிலையிலேயே அரசாங்க ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“ அனர்த்த நெருக்கடியின்போது அரச ஊழியர் வழங்கிய சேவை போற்றத்தக்கது.

நிவாரண பணிகள் அரசாங்க பொறிமுறை ஊடாக நியாயமாக வழங்கப்பட்டுவருகின்றது.

அத்தியாவசிய மீள்கட்டமைப்பு பணிகள் வேகமாக இடம்பெற்றன. அடுத்தக்கட்ட மீளமைப்பு பணியும் முன்னெடுக்கப்படும்.” எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!