இலங்கை

இலங்கை: பாதாள உலகக் குழு உறுப்பினரிடம் இருந்து உயர் வெடிபொருட்கள் மற்றும் கைக்குண்டுகளை மீட்டுள்ள பொலிஸார்

அண்மையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தியதைத் தொடர்ந்து, அதியுயர் வெடிபொருட்கள் மற்றும் கைக்குண்டு ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பாதாள உலக பிரமுகர் மத்துகம ஷான் அரோஷின் நெருங்கிய சகா ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அகலவத்தையில் உள்ள வீடொன்றின் பின்னால் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட பொருட்களில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் 310 கிராம் C4 உயர் வெடிகுண்டு தூள் ஆகியவை அடங்கும்.

கொலை முயற்சி, கடத்தல் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தமை ஆகிய குற்றங்களுக்காக சந்தேகநபருக்கு எதிராக மத்துகம நீதவான் நீதிமன்றம் முன்னர் பல பிடியாணைகளை பிறப்பித்திருந்தது.

சந்தேக நபர் கடந்த வாரம் டுபாயில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!