உலகம் செய்தி

பிரேசிலில் காவல்துறையினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு – பலர் உயிரிழப்பு

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில்(Rio de Janeiro) நடந்த சட்ட அமலாக்க நடவடிக்கையில் நான்கு காவல்துறை அதிகாரிகள் உட்பட குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக பிரேசிலிய செய்தி நிறுவனமான G1 தெரிவித்துள்ளது.

ரியோ டி ஜெனிரோவின் புறநகரில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளான அலெமாவோ(Alemao), பென்ஹா ஃபவேலா(Penha favelas) பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை வன்முறை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஆபரேஷன் கன்டெய்ன்மென்ட்(Operation Containment) என்ற முயற்சியின் ஒரு பகுதியாகும்.

நகரில் போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, உள்ளூர் வரலாற்றில் மிக பெரியது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நடவடிக்கை நடந்து கொண்டிருந்தபோது காவல்துறையினர் மற்றும் குற்ற கும்பல் இடையே நடந்த துப்பாக்கி சூடு காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

மேலும், இந்த சோதனை நடவடிக்கையில் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி