இலங்கை

குற்றவாளியை கைது செய்ய இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி – திருகோணமலையில் சம்பவம்!

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நபர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக, முறைப்பாட்டாளரிடம் பத்தாயிரம் ரூபா லஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீன் வியாபாரி மூலம் லஞ்சம் பெற முயன்றபோது பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முறைப்பாட்டாளரிடம் கோரப்பட்ட லஞ்சப் பணம், கிண்ணியாவின் மீன் சந்தை நடத்தும் சந்தேக நபரின் நண்பர் மூலம் பெறப்பட்டதுடன் அந்த நண்பர் பணத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்க முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சப்-இன்ஸ்பெக்டர், கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!