ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் பாதுகாப்பை தீவிரப்படுத்திய பொலிஸார்

பிரித்தானியாவில் லிவர்பூல், சவுத்போர்ட் பகுதியில் கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது..

ஆரம்பப் பாடசாலை சிறுவனர்களின் நடனம் மற்றும் யோகா நிகழ்ச்சி நடைபெறவிருந்த சமூக மையத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் நேரப்படி நேற்று காலை 11.50 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அங்கு கத்தியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர தேவைக்கு மட்டுமே பெற்றோர்கள் பிள்ளைகளை அழைத்து வர வேண்டும் எனவும், ஏனைய அனைத்து நியமனங்களும் சேவைகளும் வழமை போன்று இடம்பெறும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் பொலிஸார் குவிப்பு பாதுகாப்பினை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!