இலங்கை

யாழில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்!

யாழ்ப்பாணம் பெதுருதுடுவ பிரதேசத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் சுட்டுக் கைது செய்துள்ளனர்.

27 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பெதுருதுடுவ அல்வாய் பகுதியில் சந்தேகநபரை கைது செய்ய சென்ற போது பொலிஸாரை தாக்கிவிட்டு அவர் தப்பிச் செல்ல முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்தே பொலிஸார் சந்தேக நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் பெதுருதுடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர் யாழ்ப்பாணம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் திருட்டு சம்பவங்களில் சந்தேக நபர் ஆவார். சம்பவம் தொடர்பில் பெதுருதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!