அனைத்துப்பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம்

கொழும்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால் (IUSF) முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.
இதன்படி, கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு 200 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கெலும் மற்றும் மற்றொரு மாணவர் ஒருவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
(Visited 13 times, 1 visits today)