மொரீஷியஸ் ஜனாதிபதிக்கு மகா கும்பமேளா கங்கை நீரை வழங்கிய பிரதமர் மோடி

இரண்டு நாள் பயணமாக மொரிஷியஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் தரம்பீர் கோகுலுக்கு மகா கும்பமேளா கங்கை நீரையும், மக்கானாவையும் பரிசாக அளித்தார்.
மொரீஷியஸ் அதிபர் தரம்பீர் கோகுலை, அரசு மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்தியா – மொரீஷியஸ் இடையே சிறப்பான மற்றும் நெருங்கிய உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்தச் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட வரலாறும் மக்களுக்கு இடையே வலுவான இணைப்புகளும் இருப்பதை அவர்கள் நினைவுகூர்ந்தனர்.
சிறப்பு அடையாளமாக, அதிபர் கோகுல் மற்றும் அவரது மனைவி விருந்தா கோகுல் ஆகியோருக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற அடையாள அட்டைகளைப் பிரதமர் வழங்கினார்.
இந்திய அரசின் ஒத்துழைப்புடன் அரசு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயுர்வேத தோட்டத்தையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.