ஆசியா

 ஜப்பானை உலுக்கிய விமான விபத்து – விசாரணைகள் ஆரம்பம்

தோக்கியோவில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்துடன் ஜப்பானியக் கடலோரக் காவற்படை விமானம் மோதியுள்ளது.

இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடலோரக் காவற்படை விமானத்தில் இருந்த 6 ஊழியர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்த 379 பயணிகளும் சிப்பந்திகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 14 பயணிகளுக்குச் சிறுகாயங்கள் ஏற்பட்டதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

புத்தாண்டு முதல் நாளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவியை வழங்கக் கடலோரக் காவற்படை விமானம் சென்றுகொண்டிருந்தது.

பயணிகளை வெளியேற்ற எடுத்துக்கொண்ட நேரத்தை விமானத்துறை வல்லுநர்களும் பயணிகளும் பாராட்டினர். விமானத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 10 நிமிடங்களில் மேலும் ஒரு வெடிப்புச் சத்தம் கேட்டதாகப் பயணிகள் கூறினர்.

வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால் உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர். சிப்பந்திகள் விமானம் தரையிறங்குவதற்கான உத்தரவைப் பெற்றதாகக் கூறினர்.

ஜப்பானியப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம், காவல்துறை உள்ளிட்ட இதர பிரிவுகள் விசாரணையை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!